ஞாயிறு, 10 மே, 2009

மகுடேஷ்வரன்




கண்ணிருக்கு

ஆறுதல் சொன்னவர் ஒருவருமில்லை

கவிதைகளால்

யாரும் சலனமுறவில்லை

வெற்றிகளால்

அருகில் இருப்பவர் அமைதியிழக்கிறார்




அதிகபட்சம்

உன்னை அறிந்தோரிடம்

உனக்காக ஒரு கசந்த புன்னகையை

சிந்த செய்ய



உன் தரப்பை



ஒரு கணம் மனதில் நிறுத்த

மனப்பூர்வமாக

ஒருதுளி அனுதாபத்தை

சம்பாதிக்க

வேறென்ன வழியுண்டு.?




நீ



தற்கொலை செய்துகொள்வதை தவிர.