வியாழன், 7 மே, 2009


ஊமையாய் இருக்கத்தான்

நினைக்கிறேன்

என்ன வேண்டுமானாலும்

சொல்லி கொள்ளுங்கள்

என்று


வாதத்தில் விதைப்பவை

வார்த்தைகள் என்றாலும்

முளைப்பவை வலிகள் தானே..?


உளவியல் புரிந்து கொள்ள வேண்டும்...


சொல்ல நினைப்பதை

சொல்லாமல் மறைத்து

உனக்கு பிடித்ததை

சரியென்றால் சிரித்தும்

தவறென்றால் வெறுத்தும்

வேறுவேறு முகங்கள்

காட்டுகிறாய் நீ


இனி புதிய கோட்பாடுகளை

உருவாக்கி கொள்ள வேண்டும் நான்


அப்போதுதான்

உறவுகள் பிழைக்கும்

சிலுவையில் அறையபடாமல்.