செவ்வாய், 12 மே, 2009

சே. பிருந்தா


ஓடிக்கொண்டேயிருக்கிற நதி

போய்க்கொண்டேயிருக்கிற மேகம்

தினம் பூக்கிற மரம்

பறந்து திரிகிற வண்ணத்துப்பூச்சி

குரலெழும்பாமல் இசைக்கிற காற்று

வீடு முழுக்க வானம்

வானம் நிறைய பறவைகள்

அருகே, மிக அருகே

தொட்டுக்கொள்ளும் தூரத்தில்

என்றில்லாவிடினும்

என் குரல் கேட்கிற தொலைவில் நீ

இது போதும்,

இவை போதும்

வாழும்படிதான் இருக்கிறது -

வாழ்க்கை.