செவ்வாய், 12 மே, 2009

......




எப்போது எதனால்
எப்படி நேர்ந்தது
தெரியவில்லை.


திடுமென ஒரு கணத்தில்
தீர்மானிக்கப்பட்டிருக்க முடியாது.


மெல்ல மெல்லத்தான்
வர்ணங்கள் குழைத்து
இழை இழையாய்
பின்னப்பட்டிருக்க வேண்டும்.


தொய்வே இல்லாமல்
அடர்வாய் கனமாய்.


பூவின் மலர்வு போல
நம் நட்பின் பிரிவு.


சே.பிருந்தா