
செவ்வாய், 26 மே, 2009

திங்கள், 25 மே, 2009

பாலஸ்தீனப் போராளிகள் பற்றி
நான் பேசலாம்
அயர்லாந்து சுதந்திர போராட்டம் பற்றி
நான் எழுதலாம்
தியான்மென் சதுக்க கொலைகளுக்கும்
நான் குரல் கொடுக்கலாம்
யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை
இராக் பற்றி
நான் கவலைப்படலாம்
திபெத்தியர்களுக்காக
நான் கண்ணீர் விடலாம்
பர்மியப் பெண்ணுக்கும்
நான் பரிந்து பேசலாம்
யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை
சேகுவராவை
நான் கொண்டாடலாம்
ஃபிடல் காஸ்ட்ரோவை
நான் வணங்கலாம்
கொசோவா விடுதலையை
நான் ஆதரிக்கலாம்
யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை
உலகின் எந்த மூலையில்
இனப்படுகொலை நடந்தாலும்
நான் மனிதாபிமானி ஆகலாம்
யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை
எங்கு உள்ளது எனத்தெரியாத
நாட்டைப் பற்றி
நான் பேசலாம்
நான் எழுதலாம்
நான் குரல் கொடுக்கலாம்
நான் வருத்தப்படலாம்
யாருக்கும் எந்த பிரச்சினை இல்லை
ஆனால்
என் கண்ணுக்கெட்டும் தூரத்தில்
கண்ணீர்த் துளியாய்
கடலுக்குள் கிடக்கும்
நாடு பற்றி மட்டும்
நான்
எதுவும் பேசக்கூடாது
எதுவும் எழுதக்கூடாது
எதுவும் சொல்லக்கூடாது
எதற்க்கும் குரல் எழுப்பக்கூடாது
ஏனென்றால்
நான் ஒரு தமிழன்
- பவுத்த அய்யனார்


சனி, 23 மே, 2009
புணர்தல் - மகுடேஷ்வரன்

"உன்னை புணர விரும்புகிறேன்" என்று
பெற்ற தாயை
சன்யாசிக்கும்
ஆணாதிக்கம் என்பது
ஓடிப்போகிறவர்
சமுகவிதி இதுதான்
புணர்ச்சிக்கு பின்பு
விடிந்ததும்
மரணப் படுக்கையில் இருப்பவரின்
செவ்வாய், 19 மே, 2009

ஜெயகாந்தனின் சிறந்த பத்து சிறு கதைகளை படிக்க கிழே கிளிக் செய்யுங்கள்.
pdf http://pm.tamil.net/pub/pm0198/jeyakant1.
ஜெயகாந்தனின் சிறுகதை தொகுப்பை படிக்க...
http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0198.html
வியாழன், 14 மே, 2009
புதன், 13 மே, 2009
நீங்கள் இறப்பதற்கான காரணங்கள்

செவ்வாய், 12 மே, 2009
சே. பிருந்தா

சே . பிருந்தா
நேரே கண்பார்க்க தயங்கி
தரை பார்ப்பினும் கண்கூசும்
உன் வீட்டு பளிங்கு தரை
சற்றே கோணம் திரும்ப
சுவரின் உயர்தர டிஸ்டம்பர்
கண்ணில் உறுத்தும்
பலபக்கம் வியூகம்
வைத்து எனை மூலையில் தள்ளிடும்
உன் வீடு.
என் கம்பீரம் குன்றி...
சிற்றெறும்பாய் சிறுத்து....
எனை நானாய்
என் வீட்டிலேயே இருக்கவிடு!
திங்கள், 11 மே, 2009
ஞாயிறு, 10 மே, 2009
மகுடேஷ்வரன்

கண்ணிருக்கு
ஆறுதல் சொன்னவர் ஒருவருமில்லை
கவிதைகளால்
யாரும் சலனமுறவில்லை
வெற்றிகளால்
அருகில் இருப்பவர் அமைதியிழக்கிறார்
அதிகபட்சம்
உன்னை அறிந்தோரிடம்
உனக்காக ஒரு கசந்த புன்னகையை
சிந்த செய்ய
உன் தரப்பை
ஒரு கணம் மனதில் நிறுத்த
மனப்பூர்வமாக
ஒருதுளி அனுதாபத்தை
சம்பாதிக்க
வேறென்ன வழியுண்டு.?
நீ
தற்கொலை செய்துகொள்வதை தவிர.
நேர்ந்தது - மகுடேஷ்வரன்

வெள்ளி, 8 மே, 2009
உறவுகள் - ருத்ரன்

உறவுகள் சௌகரியமான பொய்கள். அவசியமான உண்மைகள். உதவும் பொய்களுக்கும் தேவையான உண்மைகளுக்கும் இடையேதான் வாழ்க்கை. வாழ்க்கை வாழ உறவுகள் தேவை.
உறவு என்பது இன்னொரு நபருடன் மட்டுமல்ல - இன்னொரு பொருளுடன் , உயிருடன் என்று எப்படியாவது இணைத்துக் கொள்ளும் ஒரு மனப்பான்மை.
இளைப்பாறிவிட்டு ? அந்த நிழலே போதும் என்றால் அதிலேயே தங்கிவிடலாம். அது தற்காலிகத் தேவைதான் என்று தெரிந்தால் வாழ்வின் பாதையை தொடரலாம் உண்மைகளைத்தான் தொடர வேண்டும் என்றில்லை : பொய்களையும் தொடரலாம். உண்மை நிஜத்தின் தரை , நடக்கத்தான் முடியும். ஆனால் பொய் ஒரு கனவின் விஸ்தாரம் - பறக்கவும் முடியுமெனும் ஆசையை நம்பிக்கையாக்கும் அரிதாரத்தின் ஆதாரம். பறப்பதற்கு சிறகுகள் அவசியம். நம் சிறகுகள் இந்த சமுதாய கூண்டில் வாழ்வதற்காக வெட்டப்பட்டவை. வெட்டிவிட்ட பச்சைக்கிளி , "ஜோசியம் சொல்லி" தீனி பெறுவதை போலத்தான் வாழ்கிறோம். கூண்டுகள் நமக்கு சிறையாக தோன்றுவதில்லை , பாதுகாப்பாக தெரிகின்றன. சின்ன சின்ன சந்தோஷங்களே போதும் என்ற கூண்டு கிளி மனப்பான்மையே நம் சமுக இயக்கத்தை நிர்ணயிக்கிறது. சமூகத்திடம் பெரும் சிறு தீனியே மனப்பசியை தீர்ப்பதால் , நம் வாழ்க்கை நிரந்தர நிம்மதியும் உற்சாகமும் தரும் தரிசனத்தை நோக்கிய தவமாக மாறுவதில்லை.

நேற்று
வியாழன், 7 மே, 2009
