வாழ்க்கை மனிதர்களை விட குருரமானது
பற்றற்று வாழ
பழகிக்கொள்
ஞானிகள் துறவிகள்
உபதேசிக்கிறார்கள்
அவர்களை
சந்திக்கும் வரை
கேலியாய் தெரிந்தது
உபதேசம்.
நேசிப்புக்கு பிறகான
வாழ்க்கை உணர்த்துகிறது
பற்றற்று
வாழ மட்டுமல்ல...
சாகவும் பழகிக்கொள்.