திங்கள், 22 ஜூன், 2009



பற்றற்று வாழ


பழகிக்கொள்



ஞானிகள் துறவிகள்


உபதேசிக்கிறார்கள்



அவர்களை



சந்திக்கும் வரை


கேலியாய் தெரிந்தது


உபதேசம்.



நேசிப்புக்கு பிறகான


வாழ்க்கை உணர்த்துகிறது



பற்றற்று


வாழ மட்டுமல்ல...


சாகவும் பழகிக்கொள்.